Sunday, September 5, 2010

என் மனதிற்கு இனியவளே!

இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வழர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கன்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கன்டேன்
உன் மீது பாசம் கொன்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வழர்த்தேன்
மனதாற நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கர்ப்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

Thursday, June 24, 2010

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்!

பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.

கண்மணியே...

மனதுக்குச் சிறையிட்டு
கனவுகளைக் கல்லூரிப் பாடமாக்கினேன்.
கண் மணியே! உன் காதல் எனக்கு...
கை கூட வேண்டும் என்று.

என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்.
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்க்காக

என் இதய ராணியே!
நினைவுகளக் கடந்த போது
நிசப்தமாய் ஒரு ராகம்
அது நீயோ!......
என்று நிமிந்து நோக்கினேன்.
அதியசம்


உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........


என் காதல் சுவாசம்...

மலரே தினமும்
உன் முற்றத்து பாதை வழியே
செல்கிறேன்.
உனை தரிசிப்பதற்க்காய் அல்ல
உன் வாசத்தை சுவாசிப்பதற்க்காய்
பெண்ணே!
நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
உன்னை பின் தொடர அல்ல
உன் காலடி சுவட்டிலாவது
என் நினைவலைகள் துளிர் விடும்
எனும் நப்பாசையால்.........
இனி என்னிடம் வார்த்தைக்கோ
பஞ்சம்.
யாரிடம் கடன் கேற்பது
உன் ரோஜா இதழ்கள்
உதிர்த்திட்ட
வார்த்தை முத்துக்கள் இல்லையோ!
தேடுகின்றேன்
கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ
கிடைத்தால்........
வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்
பல கோடி கவிதைகள்.....

என்றும் அன்புடன்
அப்புகுட்டி
.

நீ இல்லாத நான் !

காதலில்லா இவ்வையகம்
காற்றில்லா இயக்கம் போல
நீயில்லாத நான்
உயிரற்ற சடலம் போல

அண்பே!

அன்பே!
காய்ந்த சருகாய்
காயப்பட்ட
இதயத்துடன்
வீதியோரம் வீசப்படுகிறேன்
நியாயமான நிஜங்கள்
மறுக்கப்படுகின்ற போது...
உள்ளம்
அழுகிறது சிறுபிள்ளையாய்....
.

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

ஈகரைக்கோர் சிறப்புண்டு என்னவென்று வினவுவீரே
சோகமென்று வருவீரெனில் சோர்வுகள் சோர்ந்துபோகும்
வேகம் கொண்டு விரைந்து செல்லும் அன்பான அப்பு உண்டு
ஏகத்துக்கும் அன்புமழை... நனைந்தீரெனில் குளிர்ந்து போவீர்..

பாராட்ட வார்த்தை தேடி களைத்துப்போவீர் கட்டாயம்
சீராட்ட உண்டு எங்கள் அப்புவின் பாசக்குரல்தான்
தேரோட்டம் போல்தான்உண்டு தேனினிய அன்புச்சொற்கள்
யாராட்டம் என்றே நீங்கள் அன்னையை நினைவுகொள்வீர்...

தேடிநிதம் அதிசயங்கள் தேனியாய்ப் பதிவதிலும்தான்
ஓடிஓடி அன்பான வாழ்த்துக்கள் பதிவதிலும் தான்
வாடி நிற்கும் அன்புள்ளம் சிரித்திட உத்வுதல் தான்
நாடி நீ அழைத்துப்பாரேன் அன்பான அப்பு உண்டு....

புகைப்படங்கள் எங்கும் உண்டு ஆனாலும் அப்புசொல்லும்
வகையான அதிசயங்கள் வலைகளில் அற்புதங்கள்..
மிகையேதும் இல்லைசொல்லில் மிஞ்சிடும் கலைகள் இங்கே
சிகையழகு செய்திமுதல் சிக்கலான கலைகள் உண்டு...

அன்பாகக் கதைத்துப்பாரேன் அழகான குழந்தைதோற்கும்
முன்பாக வந்து உன்னை விரல்பிடித்துக் கதைகள் சொல்லும்
வம்பேதும் கண்டதில்லை வீண்வாதம் செய்வதில்லை
அம்புபோல் வந்தேநிதம் தனலட்சியம் தனிலே வெல்லும்...

சிற்றெறும்பு தன்னில் மிகுந்த எடையினைச் சுமக்கும் போலே
வற்றாத அன்பு நதியில் வகைபெறக் களிக்கும் அப்பு
தெற்றேதும் கூறிடஓர் தெள்ளுதமிழ் வரிகள் இல்லை
முற்றேதும் குறிக்கவியலா முடிவிலா அன்பன் அப்பு...

ஈகரைக்கு வந்தபின் தான் இவ்வன்பு பெற்றானோ இல்லை
தாகமுடன் கவிதை எழுத ஆர்வந்தனைக் கற்றானோ
வேகமாய் முன்னேறிஇங்கு காதல்தனைப் பெற்றானோ
ஏகத்துக்கும் காதல் வரிகள் எழுதி எம்மை அயரச்செய்தான்..

எட்டாத எண்ணிக்கை பத்தாயிரம் படைத்தான் இங்கே
தட்டாமல் பெரியோர் சொல்லை தலைமேல் தாங்கி நின்றான்
மொட்டாக இருந்த காதல் முகிழ்ந்திடக் கவிதை கண்டான்
கட்டாயம் இவனை இங்கே வாழ்த்தியே தீரல் முறையே...

ஒன்பது ரசங்கள் தன்னை உலகத்தில் கண்டிருப்பீர்
வம்பது ஏதுமின்றி பணிவது பத்தாம் ரசந்தான்
ஐம்பது வயதில்கொள்ளும் அருமையான பண்பதனை
முன்பதைப் பெற்றே இங்கு விளங்கிடும் அப்பு வாழ்க...

பத்தாயிரம் பதிவுக்கிங்கே பத்துப்பா எழுதஎண்ணி
முத்தான அப்புவுக்கு வரைந்துவிட்டேன் இப்பாபத்தும்
கொத்தாகக் கூத்துக்குலுங்கும் கவின்மலர் தன்னை ஈந்தே
அத்தாவை வணங்கி நானும் அப்புவுக்கே வழங்கினேனே....
என் இளவல் அப்புவை வாழ்த்திப் பெருமையுறும்...

அன்பு அண்ணன்
கலை

ஏக்கம்!

நீ நீயாக இரு பெண்ணே!

என் நெஞ்சினை
எவ்வளவுதான் அதட்டினாலும்
ஏனோ குறைவதில்லை.
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகள்.


ஓ... அன்பே என் நம்பிக்கையும்
என் எதிர் பார்ப்புகளும்
அதில் நசுக்கப்படுவது புரிய வில்லையா?


ரசம் சொட்ட சொட்ட
காதலைச் சொல்லி
என்னை ரணமாக்கியவளே! சொல்
உன் கௌரவத்திற்காய்
என் கனவுகளை சிதைத்து விட்டவளே!
காரணமற்ற என்னை
கதற வைத்து விட்டாயே!
நீ நானாகா விட்டாலும்
நீ நீயாக இருந்து
என் காதல் வலிக்கு
பதில் ஒன்று கூறு.......


என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

கிறுக்கல்கள்!

எத்தனை காலமானாலும்
எத்தனை பேரழகிகள்
என் வாழ்வில் வந்தாலும்
இடிதான் என் தலையில்
விழுந்தாலும்
மனதை விட்டுப்போகாது
நான் உன் மீது
கொண்ட காதலும்
உன்னைப்பற்றிய நினைவுகளும்
அப்புகுட்டி..

என் நினைவில் நீ!

என் மனதில் இருப்பவள்
நீ
மறக்கலாம் என்னை
நீ
மறக்க முடியுமா உன்னை
நான்
அப்படித்தான் மறக்கும்
காலம் வந்தாலும் மறந்திடுவேன்
என்னை நான்.

உன் நினைவு!

முகில்கள் மேகத்தை விட்டு
விலகுவதுமில்லை
மேகம் முகில்களை விட்டு
மறைவதுமில்லை
என்னுல் இருக்கும்
உன் நினைவுகளும்
அப்படித்தான்
என்னை விட்டுப்பிரிவதுமில்லை
என்னுல் இருக்கும்
காதலும்
இந்த மண்ணை விட்டு
மறைவதுமில்லை.

மறக்க முடிய வில்லை!

கண்ணே
உன்னைக் காதல் கொண்ட காலங்களில்
தினம் தினம் நினைக்கத்துடித்தேன்
அன்று..
உன்னை மறந்தாலும்
நம் காதல் நினைவலைகளை
மறக்கத் துடிக்கிறேன்
இன்று...
நான் உன்னுடன் என்ற
சொல் கேட்டு
என் நெஞ்சில் ஒட்டிக்கொண்ட
உன் விம்பம்
இன்று
புயல் காற்றில் மாட்டிய
காகிதம் போல்
திசை மாறி
போய் விட்டது கிழிந்து.
உன் உருவத்தை என் நெஞ்சை விட்டு
அகற்ற முடிந்த என்னால்
நம் காதல் நினைவுகளை
மறக்க முடியாமல் துடிக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை
இன்னும் என்காதல் ஞாபக தூரல்கள்
என் நெஞ்சை காயப்படுத்திச் செல்கின்றது.
அக்காயங்களை
என் காதல் நினைவால் சிந்தும்
கண்ணீர் கொண்டு
ஆற்றிடப் பார்க்கிறேன்.
ஆறிடுமோ மறக்க நினைத்த
என் காதல் நினைவுகள்.???

என் அருமைத் தம்பி அப்புவின் பிறந்த நாள்.


இன்று பிறந்தாய் சகோதரா....

உன் தாயின் மணிவயிறு குளிரநீ வந்தாய்..
என் பாசம் பகிர்ந்து அன்பே தந்தாய்...

உன்மழலை மொழி எனது இனிய இசைதான்..
என் கவலை அதில் கரையும் ஊக்க விசைதான்..

உனை நானும் நேரில் தான் கண்டதுமில்லை..
எனைப் போல வெண் மனம் தான் கொண்டது உண்மை...

அரிதாரம் பூசாத அருமைத் தும்பி...
உரித்தாகும் என் வாழ்த்து உனக்கே தம்பி..

இன்று மலர்ந்த அழகான அல்லிப்பூவே...
என்றும் நீ மனம் மகிழ வாழ்த்தும் நெஞ்சே..

அழகான வாசகங்கள் அரவணைக்கும் உன்
பழ்குமுறை எவரையுமே வசப்படுத்தும்...

எளிய தொரு பட்டாம்பூச்சி நீயே என்பேன்
துளிகூட மருவில்லா நிலவே நீதான்...

வாழ்க்கையிலே நீகண்ட ஏழ்மை எல்லாம்.
சீழ்க்கையிலே கரைந்துவிடும் சிறப்பாய் நன்றே..

தோற்கையிலே தோள் கொடுக்க அண்ணனிங்கே
வேடகையிலே குளிர் மோராய் நானும் நிற்பேன்...

நடைபோட்டு நல்விதமாய் முன்வருவாயே
தடை எல்லாம் பொடிதாகும் தங்கக்கம்பி...

ஈகரையின் கரைசேர்ந்த அன்புப்படகே உனை
சோகமுடன் காணா நிலை இறை தருவானே...

இன்றைப்ப்போல் முகம் மலந்து என்றும் நீயும்
கன்றைப்போல வலம் வந்து களிப்பாய் நீயே...

என்னாளும் என்னன்பே முந்திடாதோ..
பொன்னாளும் உனைத தழுவ வந்திடாதோ...

குறையின்றிப் பெருவாழ்வு நீயும் வாழ
இறையை நான் தொழுது தினம் வேண்டினேனே...!


அன்புடன்

கலை அண்ணா..

Monday, June 21, 2010

காதல் விசனம்!

உன் அன்பு வேண்டும்......

நம்பலாமா இதை சும்மா....

காதர்கள் நிலை ???

சும்மா கிறுக்கியது அப்புகுட்டி...

கண்ணீர் வேண்டாம்...

நல்ல கோலம் அப்புகுட்டி.

சும்மா தமாசுக்கு.

உன் எண்ணங்கள்.....




மலர்கள் மலர்வது வண்டுக்காக
நீ மலர்ந்தது எனக்காக
என் தேகத்தில்
குருதியாக அசைபவளே
என் உதிரம் கூட
உன் பெயதைத்தான் உச்செரிக்கிறது
இதை நம்ப முடியுமா
உன்னால்
காதலி ப்ளீஸ் என்னை காதலி

Sunday, June 13, 2010

மீண்டும் துடிக்கும் இதயம்...

உறங்கும் விழிகள்
உறங்காத இதயம்
உனை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு
பாதை தெரியாது
உனை நினைத்து
துடிக்கும்
இதயத்திற்கு திசை தெரியாது
துடிக்கும் என் இதயம்
நின்று போகலாம் ஆனால்“
நின்ற என்இதயம் மீண்டும் உனை நினைத்து
துடிக்கும்

நீ என் அருகில் இருந்தால்..................

அப்புகுட்டி அன்பு மலர்

நண்பனே!

நண்பனே!
வேசி வீட்டுக்குச் சென்று
டீப்லைட்டை
அணைப்பதை விட
கைம் பெண் வீட்டுக்குச் சென்று
சிறு விளக்கை ஏற்று!
உண் வாழ்க்கை
துளிர் விடும்
நின்மதியாய்

பாதம் பட்ட மண்

தேடலின் சுகங்கள்...

ஈகரைக்கு சிவா மீது காதல்!

வண்டுக்கு மலர் மீது காதல்
வானுக்கு நிலவு மீது காதல்
கடலுக்கு அலை மீது காதல்
கன்னிக்கு கற்பு மீது காதல்
மலருக்கு மணம் மீது காதல்
மழைக்கு மண் மீது காதல்
இரவுக்கு பகல் மீது காதல்
இருளுக்கு சுடர் மீது காதல்
நதிக்கு கடல் மீது காதல்
உயிருக்கு உடல் மீது காதல்
நந்திதாக்கு தமிழ் மீது காதல்
சிவாக்கு ஈகரை மீது காதல்
ஈகரைக்கு சிவா மீது காதல்
கலை நிலாவுக்கு கவிதை மீது காதல்
கவிதைக்கு ஆதிரா மீதும் கலை மீதும் காதல்
எனக்கு உங்கள் அனைவரின் மீது காதல்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி

உன் நினைவு மட்டும்.

நீ என்னை விட்டுச் சென்றாலும்
உன் நினைவை விட்டு சென்றிருக்கிறாய்
அது போதும்
என் வாழ்க்கைக்கு.....

காதலைப் பற்றி....

காதலர்கள் தோற்கலாம்
ஆனால் காதல்
தோற்காது


காதல் இதயத்தில்
பூத்துக்குலுங்கும்
புது வித உறவு.......

அப்புவிற்கான கலை நிலாவின் கவிதை...

கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?

கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .

உன் அன்பைப் பெற காத்திருப்பேனடி...

என் விழி கொண்டு
பார்த்திருந்தால் மறந்திருப்பேனடி
உன் முகத்தை.....
இதயக் கண் கொண்டு
பார்த்ததினால்
பதித்திட்டேனடி என் நெஞ்சில்
உன் உருவத்தை
.


நான் காணும் கனவெல்லாம்
தோற்றுதடி உன் முகத்தை
என் கனவில் நீ வருவதனால்
வளர்த்து விட்டேனடி
கற்பனையை
வருவதென்றால் சொல்லிவிடு
காத்திருப்பேனடி
பல கோடி ஜென்மங்கள்
.

தாய் பற்றி நான் எழுதிய கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள்.

கலை அண்ணன்..

அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....

தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,

உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,

இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..

பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..

என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...

அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்..

ஆதிரா மேடம்....

அப்பு அழகான கவிஞர் நீங்கள்.. கவிஞர் மட்டும் இல்ல அழகான மென்மையான உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்...பாசமான பிள்ளையும் நீங்கள்... உங்கள் நட்பு எனக்குப் பெருமையாக இருக்கிறது... இன்னும் இன்னும் உங்களுடனான நட்பு தொடரும் வரம் வேண்டும் மனதுடன்...பெருமையாக...

பாலன் அண்ணன்

பலநாடுகளில் (இலங்கை, இந்தியா உள்ளிட்ட) இன்று அன்னையர் தினம் இன்றைய இனிய நாளில் உங்கள் கவிதை அம்மாவைப் பற்றிக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி,
மன்றத்திலுள்ள அன்னையர்கள் அனைவரிற்கும் அன்னையர் தின வாழ்த்துகள் அன்பு மலர்

சரவணன்.




வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

ஹாசிம்

ஆனந்தக்கண்ணீர் வருகிறது நண்பா தாயை பிரிந்து தவிக்கும் எமக்கு வரிகள்தான் ஆறுதலாகிப்போனது

ஹனி

அப்பு உங்கள் தாய்க்கு நீங்கள் பாடிய கவிதைகள் அனைத்தும் அருமை அப்பு
மனம் நெகிழ்கிறது.

அனைவரும் என் அன்பு நன்றிகள் அன்பு உறவுகளே
என்றும் உங்கள் அன்பில் வாழும்
அன்பு அப்புகுட்டி.

என் அன்புத் தாயை எண்ணி வரைந்த வரிகள்...

உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.


என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி ஏழுத
ஓரிரு வரிகள் போதாது

என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது


என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நிண்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.

என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோழ் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
என் அன்புத்தாயே
!
அன்பு மலர்ஐ லவ் யூமுத்தம்

தலைவியின் காதல் பார்வை!

தங்கத் தலைவியின்
காதல் பார்வையில்
மயங்கிய தலைவன்
காலமெல்லாம்
தலைவியின் காலடியில்
கிடக்காமல்
தமிழுக்காக தன்னை
அர்ப்பனித்த தங்கத்தலைவனின்
புகழ் பாட வயசு பத்தாது
என்றும் உங்கள்
பொது சேவை இன்னும்
தமிழ் மக்களுக்கு
சேர்ந்த வண்ணம்.

என்றும் உன் நினைவில்....

இது வரை வாழ்ந்தது எல்லாம்
இன்பமாகத்தானே....
இனி வரும் நாட்கள் எல்லாம்
உன்னோடுதானே!
என் கண்கள் இரண்டில் நான்
சிறை வைத்ததும் உன்னைத்தானே!
நாளும் உன் பாதமே
நான் வாழும் வேதமே
என் இதயத்தில் மலர்ந்ததும் நீதானே
உன்னழகைப் பார்த்து
மறந்ததும் என்னைத்தானே
நீ பிரிந்து சென்றதும்
வருவாய் என காத்திருந்தேனே
நீ வரா விடினும்
காலம் காலமாய்
உனை நினைத்து வாடியிருப்பேனே!

அன்பு ஆதிரா மேடத்தின் வாழ்த்து...


அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி...





அப்பு அப்பு என்று அழைக்கும் தோறும் -என்செவியில்
அப்பா அப்பா என்றே அரைதல் கண்டேன்!
நாளும் தப்பாமல் அன்பள்ளிப் பொழிந்ததாலோ! என்
தந்தைக்கும் மேல்நின்றாய் தகைமை கொண்டாய்!


நடமாடும் அன்புருவே! நாள்தோறும் நான்பருக
மழலை தேன்சிந்துபாடி வந்தாய்!பாழும் தூரம்தான்
என்செய்யும்? பாசத்தைக் கூட்டி விட்டால்
!வாழ்வாய் என்நெஞ்சத்தில்! வாழ்த்துகிறேன்!


உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!

மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!

வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவற்றை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!