Saturday, May 15, 2010

கண்மணியே...


மனதுக்குச் சிறையிட்டு
கனவுகளைக் கல்லூரிப் பாடமாக்கினேன்.
கண்மணியே! உன் காதல் எனக்கு...
கை கூட வேண்டும் என்று...

என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்...
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்காக..

என் இதய ராணியே!..
நினைவுகள் கடந்த போது
நிசப்தமாய் ஒரு ராகம்
அது நீயோ!......
என்று நிமிர்ந்து நோக்கினேன்...
அதியசம்!..

உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உந்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது.
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து கண்ணீர் ஊற்றானது........
***************************************************

No comments:

Post a Comment