Thursday, June 24, 2010

நீ நீயாக இரு பெண்ணே!

என் நெஞ்சினை
எவ்வளவுதான் அதட்டினாலும்
ஏனோ குறைவதில்லை.
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகள்.


ஓ... அன்பே என் நம்பிக்கையும்
என் எதிர் பார்ப்புகளும்
அதில் நசுக்கப்படுவது புரிய வில்லையா?


ரசம் சொட்ட சொட்ட
காதலைச் சொல்லி
என்னை ரணமாக்கியவளே! சொல்
உன் கௌரவத்திற்காய்
என் கனவுகளை சிதைத்து விட்டவளே!
காரணமற்ற என்னை
கதற வைத்து விட்டாயே!
நீ நானாகா விட்டாலும்
நீ நீயாக இருந்து
என் காதல் வலிக்கு
பதில் ஒன்று கூறு.......


என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

No comments:

Post a Comment