என் விழி கொண்டு
பார்த்திருந்தால் மறந்திருப்பேனடி
உன் முகத்தை.....
இதயக் கண் கொண்டு
பார்த்ததினால்
பதித்திட்டேனடி என் நெஞ்சில்
உன் உருவத்தை.
நான் காணும் கனவெல்லாம்
தோற்றுதடி உன் முகத்தை
என் கனவில் நீ வருவதனால்
வளர்த்து விட்டேனடி
கற்பனையை
வருவதென்றால் சொல்லிவிடு
காத்திருப்பேனடி
பல கோடி ஜென்மங்கள்.
No comments:
Post a Comment