Wednesday, June 9, 2010

காதல் பாடம்!

காதல் என்றால்
என்னவென்று
அறியாத பருவத்தில்
காதலை என்னில்
விதைத்து என்னுள்
ஊடுருவி இன்று என்னை
காயப்படுத்தி போனவளே!
உன்னால் ஏற்ப்பட்ட காதல்
வடுக்கள் இன்னும் என்னை
காயப்படுத்துகின்றன
என் காயத்துக்கு மருந்திட
வருவாய் என நினைத்தேன்
நீயும் வந்தாய்
மருந்து தடவ அல்ல
நம் காதலுக்கு முற்றுப்புள்ளி
இட்டுச் செல்ல
கலங்குகின்றேன்
நினைத்ததெல்லாம் ரணமாகிப்போன
என் உள்ளத்தை எண்ணி.
இன்று கூட கண்ணீர் சிந்துகின்றேன்
முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட
நம் காதலை எண்ணி
இன்னும் உன் நினைவுகள்
என் நெஞ்சறையினுள்
முள்ளாய் மாறிக் குத்திக்
கொண்டிருக்கிறது.

அப்புகுட்டி.

No comments:

Post a Comment