Thursday, June 24, 2010

என் அருமைத் தம்பி அப்புவின் பிறந்த நாள்.


இன்று பிறந்தாய் சகோதரா....

உன் தாயின் மணிவயிறு குளிரநீ வந்தாய்..
என் பாசம் பகிர்ந்து அன்பே தந்தாய்...

உன்மழலை மொழி எனது இனிய இசைதான்..
என் கவலை அதில் கரையும் ஊக்க விசைதான்..

உனை நானும் நேரில் தான் கண்டதுமில்லை..
எனைப் போல வெண் மனம் தான் கொண்டது உண்மை...

அரிதாரம் பூசாத அருமைத் தும்பி...
உரித்தாகும் என் வாழ்த்து உனக்கே தம்பி..

இன்று மலர்ந்த அழகான அல்லிப்பூவே...
என்றும் நீ மனம் மகிழ வாழ்த்தும் நெஞ்சே..

அழகான வாசகங்கள் அரவணைக்கும் உன்
பழ்குமுறை எவரையுமே வசப்படுத்தும்...

எளிய தொரு பட்டாம்பூச்சி நீயே என்பேன்
துளிகூட மருவில்லா நிலவே நீதான்...

வாழ்க்கையிலே நீகண்ட ஏழ்மை எல்லாம்.
சீழ்க்கையிலே கரைந்துவிடும் சிறப்பாய் நன்றே..

தோற்கையிலே தோள் கொடுக்க அண்ணனிங்கே
வேடகையிலே குளிர் மோராய் நானும் நிற்பேன்...

நடைபோட்டு நல்விதமாய் முன்வருவாயே
தடை எல்லாம் பொடிதாகும் தங்கக்கம்பி...

ஈகரையின் கரைசேர்ந்த அன்புப்படகே உனை
சோகமுடன் காணா நிலை இறை தருவானே...

இன்றைப்ப்போல் முகம் மலந்து என்றும் நீயும்
கன்றைப்போல வலம் வந்து களிப்பாய் நீயே...

என்னாளும் என்னன்பே முந்திடாதோ..
பொன்னாளும் உனைத தழுவ வந்திடாதோ...

குறையின்றிப் பெருவாழ்வு நீயும் வாழ
இறையை நான் தொழுது தினம் வேண்டினேனே...!


அன்புடன்

கலை அண்ணா..

No comments:

Post a Comment