Thursday, June 24, 2010

மறக்க முடிய வில்லை!

கண்ணே
உன்னைக் காதல் கொண்ட காலங்களில்
தினம் தினம் நினைக்கத்துடித்தேன்
அன்று..
உன்னை மறந்தாலும்
நம் காதல் நினைவலைகளை
மறக்கத் துடிக்கிறேன்
இன்று...
நான் உன்னுடன் என்ற
சொல் கேட்டு
என் நெஞ்சில் ஒட்டிக்கொண்ட
உன் விம்பம்
இன்று
புயல் காற்றில் மாட்டிய
காகிதம் போல்
திசை மாறி
போய் விட்டது கிழிந்து.
உன் உருவத்தை என் நெஞ்சை விட்டு
அகற்ற முடிந்த என்னால்
நம் காதல் நினைவுகளை
மறக்க முடியாமல் துடிக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை
இன்னும் என்காதல் ஞாபக தூரல்கள்
என் நெஞ்சை காயப்படுத்திச் செல்கின்றது.
அக்காயங்களை
என் காதல் நினைவால் சிந்தும்
கண்ணீர் கொண்டு
ஆற்றிடப் பார்க்கிறேன்.
ஆறிடுமோ மறக்க நினைத்த
என் காதல் நினைவுகள்.???

No comments:

Post a Comment